Skip to main content

Posts

இருதய அடைப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்

இருதய அடைப்புக்கான முதன்மை காரணங்களாக இருப்பது அதிக மது, புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றது. இருதயம் சிறப்பாக செயல்படுவதற்கு சுத்தமான காற்று, தண்ணீர், தாவர வகை உணவு மற்றும் உடல் உழைப்பு, இந்நான்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இந்த நான்கில் ஒன்று அதிக காலமாக குறைவு அல்லது அசுத்தம் ஏற்பட்டால் கூட இருதய அடைப்பு ஏற்படுகின்றது. இதில் சுத்தமான தண்ணீர் இருதய ரத்த ஓட்டத்திற்கு மிக முக்கியம். சுத்தமான தண்ணீர் தவிர வேற எந்தவிதமான தண்ணீர் (மது) அதிகமாக மற்றும் நாளைடைவில் எடுத்துக்கொள்ளும் போது இருதயத்தில் கொழுப்பு சேர்ந்து அடைப்பை ஏற்படுத்தும். சுத்தமான காற்று இதயம் இயங்குவதற்கு தேவைப்படுகின்றது. புகை பிடிக்கும் பழக்கத்தினால் சுத்தமான காற்று அசுத்தம் அடைந்து அது நுரையீரல் இயக்கத்தை தடைபடுத்தும். நுரையீரல் இயக்கம் தடை ஏற்படும்போது இதயத்திற்கு தேவையான காற்றின் அளவு குறைந்து மாரைடப்பு ஏற்படுகின்றது. இந்த அசுத்தமான காற்று மற்றும் நீரினால் ரத்த ஓட்ட தடை ஏற்பட்டு கால் மற்றும் கைகளில் வீக்கம் ஏற்படுகின்றது. இந்த வீக்கம் அல்லது கையில் வலி ஏற்படுவது மாரடைப்புக்கான...

zandu balm science

Zandu balm ஒரு வலி நிவாரணியாக பயன்படுத்தப்படுகின்றது. இதில் இரண்டு வகை உள்ளன. ஒன்று வெள்ளை நிறத்தில் இருக்கும். மற்றோன்று சிவப்பு நிறத்தில் மெடிக்களில் கிடைக்கும். வெள்ளை நிற zandu balm லேசான தலைவலி மற்றும் இருமல் இவற்றை குணப்படுத்தக்கூடியது. சிவப்பு நிற zandu balm அதிக எரிச்சல் மற்றும் வலிகளை குணப்படுத்தக்கூடியது. இதன் அறிவியல் பார்ப்பதற்கு முன் இதற்கான பாட்டி வைத்தியங்களை பார்ப்போம். zandu balm வருவதற்கு முன் தலைவலி மற்றும் இருமல் வந்தால் சூடத்தை எண்ணெயில் சூடு படுத்தி அதை தலை மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து வலிகளை குணப்படுத்தினார்கள். காதில் ஏற்படும் அதிக வலி மற்றும் கால் மற்றும் கை எரிச்சலினால் ஏற்படும் வலிகளை காய்ந்த மிளகாயை எண்ணெயில் சூடுபடுத்தி அந்த எண்ணெயை தடவி தாங்க முடியாத வலிகளை குணப்படுத்தினார்கள். இப்பொழுது zandu balm அறிவியலை காணலாம். வெள்ளை நிற zandu balm சூடம் மற்றும் நீலகிரி தைலம் முக்கிய மருந்தாக கொண்டு தயாரிக்கப்படுகின்றது. சிவப்பு  நிற zandu balm Capsaicin Extract (மிளகாயில் இருந்து பெறப்பட்ட மூலப்பொருள்) மற்றும் நீலகிரி தைலம் முக்கிய மருந்தாக கொண்டு தயாரிக்...

உமிழ்நீர் சுரப்பின் பின் உள்ள அறிவியல்

நாம் சாப்பிடும் போது உணவை நன்றாக மென்று கூழ்ம நிலைக்கு மாற்றி நல்ல உணவு செரிமானத்திற்கு உமிழ்நீர் உதவுகின்றது என்பதை அனைவரும் அறிவீர்கள்.  இந்த உமிழ்நீர் எவ்வாறு மற்றும் எப்போது சுரக்கும் என்பதற்கான அறிவியல் பற்றி காணலாம்.  1. நாம் சாப்பிடும் போது வாய் அசைவு மற்றும் உணவின் சுவை நாக்கின் உணர்வு நரம்புகள் மூலமாக கடத்தப்பட்டு உமிழ்நீர் சுரப்பி தூண்டப்படுகிறது. இதனால் தேவையான அளவு உமிழ் நீர் சுரக்கின்றது. 2. அடுத்ததாக புளிப்பு சுவை உள்ள உணவு பொருட்களை சாப்பிடும் போது அதிகமாக உமிழ் நீர் சுரக்கும் உதாரணமாக புளி, ஊறுகாய் மற்றும் எலுமிச்சை இவற்றை சாப்பிடும்போது அதிகமாக சுரக்கும். ஏன் புளிப்பு சார்ந்த உணவை சாப்பிட்டால் அதிகமாக சுரக்கின்றது?  புளிப்பு உணவு மற்றும் பழங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது எடுத்துக்கொள்ளும்போது சிட்ரிக் அமிலம் பற்களை அரித்து சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால் புளிப்பு சுவையை அறிந்தவுடன் பற்களை பாதுகாக்க உமிழ்நீர் சுரப்பி உமிழ் நீரை சுரக்கின்றது. உண்மையில் புளிப்பு சுவை உள்ள சிட்ரிக் அமிலம் பற்களை மட்டும் அல்ல நம் உடலில் உள்ள எலும்பைக்கூட அரித்து சேதப்...

ஏன் காய்கறிகளும் பழங்களையும் எடுத்து கொள்வது அவசியம்?

மனித உயிர்கள் உருவாக்கத்திற்கு தேவையான மிக முக்கிய மற்றும் அடிப்படை மூலக்கூறுகளாக கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த மூன்று மூலக்கூறுகளும் அதிக அளவில் அல்லது சம பங்கு அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ளது.  இது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கொண்டுள்ளதால் உடல் வளர்ச்சி, ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறனுக்கு மிக பெரிய அளவில் உதவுகின்றது. இதில் உடலுக்கு தேவையில்லாத பொருட்கள் இல்லாததால் உடலில் கெட்ட கொழுப்புக்களை உருவாக்குவதில்லை. மாறாக கெட்ட கொழுப்பு உடலில் இருந்தால் அதை உட்கிரகித்து உடலில் இருந்து நீக்குகின்றன.  காய்கறிகளும் பழங்களும் அதிகம் எடுக்காமல் எண்ணெயில் பொறித்த உணவுகள் மற்றும் நீரற்ற காய்ந்த தின்பண்டங்கள் மற்றும் உடலுக்கு ஒவ்வாத உணவுகள் மற்றும் மது பானங்களை எடுக்கும் போது உடல் வளர்ச்சி , ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் பாதிக்கப்படுகின்றன. இது நாளடைவில் உடல் உறுப்புகளை பாதிக்கின்றன.   மேற்கூறிய உணவுகளில் சம அல்லது அதிக அளவு கார்பன், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் இல்லாததை இதற்கு காரணம். இயற்கை உணவுகளை எடுத்து கொள்வத...

ஆபத்து நேரங்களில் சோடா ஏன் கொடுக்கப்படுகின்றது?

மனிதர்கள் மயக்கம் அடையும் நேரத்தில் சோடா கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இதன் அறிவியல் பின்னணி என்ன என்பதை காணலாம். மயக்கம் நமது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடை ஏற்படும் போது oxygen பற்றாக்குறை மூளையில் ஏற்படுகின்றது. இதனால் நாம் மயக்க நிலையை அடைகின்றோம்.  ரத்த ஓட்டம் செல்லாததிற்கு முக்கிய காரணம் இதயம் இயக்கம் சீராக இல்லாமல் மெதுவாக இயங்க ஆரம்பிக்கின்றது. இதனால் மூளைக்கு தேவையான ரத்தம் செல்வதில்லை. இதயம் சீராக இயங்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தண்ணீர் அளவு மற்றும் இதயம் இயங்குவதற்கு தேவையான சோடியம் , பொட்டாசியம் , கால்சியம் மற்றும் மெக்னீசியம் அவசியம். இந்த அயனிகள் குறைந்தால் இதயம் இயங்க தேவையான மின்சமநிலை குறையும். முக்கியமாக சோடியம் அளவு குறையும் பொது இதயம் இயங்க தேவையான மின் சமிக்ஞைகள் (electrical signals) உற்பத்தி குறைகின்றது. இந்த மின் சமிக்ஞைகள் இதய இயக்கத்தின் வேகத்தை  அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. இதனால் மூளை ரத்த ஓட்டம் சீராகின்றது. மயக்கம் தெளிகின்றது. இந்த சோடியம் சோடாவில் இருப்பதால்தான் சோடா கொடுக்கப்படுகின்றது.

பள்ளியில் வேப்பமரம்

பெரிய நகரங்களில் உள்ள பள்ளியில் பயிலும் குழந்தைகள் சளி அல்லது இருமல் என்றால் பள்ளி நிர்வாகம் குழந்தைகளை பள்ளிக்கு வர வேண்டாம் என்று பெற்றோர்களிடம் முன்பே சொல்லி விடுகிறார்கள். ஏனென்றால் மற்ற குழந்தைகளுக்கும் கிருமிகள் பரவக்கூடாது என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் இந்த பரிந்துரைகளை பெற்றோர்களிடம் சொல்வதில்லை. கிராமங்களில் உள்ள பள்ளிகளில் பொதுவாக வேப்ப மரங்கள் நடப்படுவதால் கிருமிகள் குழந்தைகளிடம் பரவுவது தடுக்கப்படுகின்றது. அறிவியல் ஆய்வு :

கழுத்து மற்றும் முதுகு வலி வீட்டு வைத்தியம்

 கழுத்து மற்றும் முதுகு வலி வீட்டு வைத்தியம் உடலில் கழுத்து மற்றும் முதுகு பாகங்களில் ரத்த ஓட்டம் சீரான நிலையில் இல்லாத போது வலி ஏற்படுகின்றது. இதை தவிர்க்க பின்வரும் வீட்டு வைத்தியத்தை எடுத்துக்கொண்டால் பலன் அளிக்கும். நான்கு அல்லது ஐந்து பூண்டு எடுத்து கொண்டு தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். கொதித்த உடன் இதை குவளையில் எடுத்து கொண்டு சிறிது தேன் சேர்த்து அருந்த வேண்டும். இது சிறிது நேரத்தில் ரத்த ஓட்டத்தை சீராக்கி வலியை நீக்கும். இது மட்டும் அல்லாமல் வலி உள்ள இடங்களுக்கு உடல் பயிற்சி அளித்தால் கூடுதல் பலன் அளிக்கும்.           

உடல் நல பிரமிடு

நமது உயிரும் உடலும் சிறப்பாக இயங்க மூன்று முக்கிய பங்கீடு அவசியம். அந்த மூன்று காற்று (oxygen) , நீர் (water) மற்றும் உணவு (carbohydrate) ஆகும். இவை நாம் தினசரி எடுத்து கொண்டாலும் இதன் அளவு மற்றும் இதில் எதற்கு முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது  அறிந்து கொள்ள வேண்டும்.  பொதுவாக நாம் முதலில் கவனம் செலுத்துவது உணவுக்குத்தான். மற்ற நீர் மற்றும் காற்றுக்கு அடுத்த படியாக முன்னுரிமை கொடுத்து எடுத்து கொண்டு வருகிறோம். உணவுக்கு அதிகமாக முன்னுரிமை கொடுத்து எடுத்து கொள்வதால் மற்ற இரண்டின் சமநிலை பாதிக்கப்படும் அல்லது அதிகமாக உடலுக்கு தேவைப்படும்.  உடல் நல பிரமிடு image அடிப்படையில் oxygen அணு காற்று , நீர் மற்றும் உணவில் மூன்றிலும் பங்கிடப்பட்டுள்ளது. Hydrogen அணு நீர் மற்றும் உணவு இரண்டிலும் பங்கிடப்பட்டுள்ளது. கார்பன் அணு உணவில் மட்டும் பங்கிடப்பட்டுள்ளது.  இதன் பங்கிட்டு விகிதம் 3:2:1 என்ற அளவில் இருக்கிறது. இந்த பங்கிட்டு விகிதத்தின் அடிப்படையில் நாம் அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டியது முதலில் காற்றுக்கு அடுத்த படியாக நீர் மற்றும் மூன்றாவதாக உணவு. அதாவது உடல் பயிற்...

முட்டை அறிவியல் பின்னணி

முட்டை ஒரு சிறந்த முழு உணவாகும். முட்டையில் உள்ள உடலுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் அதிகம். இதனால்தான் இரண்டு முட்டைகளை சாப்பிட்டால்கூட ஒரு மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி ஏற்படும்.  பொதுவாக பள்ளிகளில் முட்டைகள் கட்டாயமாக மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மாணவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கின்றது. மற்றோன்று அவர்களின் மூளையின் சக்தி மற்றும் திறனை அதிகரிக்கின்றது. இதனால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க உதவுகின்றது. உதாரணமாக மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகள் கூட பள்ளிக்கூடத்தில் சேர்த்து முட்டை போன்ற ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது நாளடைவில் அவர்களின் மூளை திறன் அதிகரித்து அவர்களின் கல்வித்திறனும் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.  இப்போது முட்டையில் உள்ள அறிவியலை பார்க்கலாம்.  கோழிகள் முட்டைகளை இடும்போது அதில் கோழிக்குஞ்சுகள் வளரத்தேவையான அனைத்து ஊட்ட சத்துக்களையும் முட்டைக்கு அளிக்கின்றது. எலும்புகள், தசைகள் மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்கள் அடங்கும்.  அதில் முக்கியமான சத்து என்னவென்றால் கோலின் ( choline ) ஆகும். கோல...

ஒரு ஆட்டின் கதை

Need independence day for goat  குட்டி ஆடு : அம்மா, நான் புல்லின் மீது ஓடி விளையாட வேண்டும் அம்மா , என்னை கூட்டிட்டு போகிறீர்களா. அம்மா ஆடு : சரி டா குட்டி நாம போகலாம். நன்றாக மழை பொழிந்து முடிந்த நேரம், அம்மாவும் குட்டி ஆடும் மகிழ்ச்சியாக புல்லை மேய்ந்து கொண்டு விளையாண்டது. சாயங்காலம் 5 மணி ஆனதும் ஆடு மேய்ப்பவர் வந்ததும் ஆட்டினை கூட்டிச்சென்றார். ஆட்டு கொட்டகையில் அடைத்து வைத்தார். குட்டி : அம்மா , என்னுடைய அப்பா எங்கம்மா எனக்கு அப்பா இல்லையாமா என கேட்டது. அம்மா : உனக்கு அப்பா இருந்தார் ஆனா இப்ப இல்லம்மா. குட்டி : ஏன்மா , அப்பா எங்க போய்ட்டார். அம்மா : அப்பாவ சாமிகிட்ட காவு குடுத்துட்டாங்கம்மா.. குட்டி : என்னமா என்ன சொல்றிங்க என்று புரியாமல் கேட்டது. அம்மா : அதுவா ஒன்னும் இல்லமா, சாமி கிட்ட போயிருக்காங்கமா ஒரு நாள் வருவாங்கனு சமாதானம் செய்தது. என்ன சொல்வது என்று தெரியாமல் குட்டியின் முகம் வாடிவிட்டது. மறு நாள் ஆடு வாங்குபவர் கொட்டகைக்கு வந்தார். ஆடு மேய்ப்பவரிடம் ஒரு இளம் குட்டி வேண்டும் என்று கேட்டார்.  ஆடு மேய்ப்பவர் அவரிடம் பெரிய ஆடு இருக்கிறது வாங்கி கொள்ளலாமே இளம் குட்டி...

மூட்டு வலி நிவாரணம்

மூட்டு வலி நிவாரணம்  உடல் இயங்குவதற்கு மூட்டு எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. எலும்புகள் வலுவாக இருக்குமானால் உடல் இயக்கமும் எளிதாக இருக்கும். மூட்டு எலும்புகள் பலவீனமாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று இன்றைய உணவு பழக்க மாறுபாடுகள். அதிக மாவுச்சத்து மற்றும் குக்கரில் சமைக்கபடும் உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் அதிகமாக மாமிச உணவுகள், இந்த உணவுகளால் உடல் எடை அதிகரித்து மூட்டுகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றது.  இந்த அழுத்தம் மூட்டு இடையில் உள்ள synovial fluid (மூட்டுறை திரவம்) அளவை குறைக்கின்றது. இந்த synovial fluid பயன்பாடு நம் மூட்டு இடையில் உள்ள உராய்வை குறைத்து வலி இல்லாமல் சீராக நடக்க உதவுகின்றது.  பொதுவாக வயது ஆவதால் எலும்பில் உள்ள திசுக்களின் அடர்த்தி குறைந்து கொண்டே வரும். இதன் அடர்த்தி அதிகமாக இருப்பதற்கு மெக்னீசியம் மற்றும் கால்சியம் அளவு மிக முக்கியமாக இருக்கின்றது. இந்த மெக்னீசியம் மற்றும் கால்சியம் குறைபாட்டினால் எலும்பில் உள்ள திசுக்களின் அடர்த்தி குறைந்து கால் வீக்கம் மற்றும் நடக்க முடியாமல் போகும் நிலைமை ஏற்படுகிறது. இந்த நோய் osteop...

மஞ்சள் காமாலை மருந்து

கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.

சர்க்கரை நோய் மருந்து

உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.

மருத்துவ செடிகள்

துளசி - சுவாச விருத்தி  கற்றாழை - சரும விருத்தி  காரட் - கண் விருத்தி  தாத்தா செடி - காய விருத்தி  எலுமிச்சை - உடல் சுத்தி  கரிசலாங்கண்ணி - தேச சுத்தி  கருவேப்பிலை - உடல் விருத்தி நித்ய கல்யாணி - புற்று சுத்தி  கீழா நெல்லி - மஞ்சள் காமாலை மருந்து  வல்லாரை - மூளை விருத்தி தும்பை செடி - விஷம் முறுக்கி

சரும நிவாரணி சோற்றுக் கற்றாழை - Aloe Vera

சோற்றுக் கற்றாழை (aloe vera) சரும நோய்களுக்கு மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அலர்ஜி , பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளினால் சருமத்தில் ஏற்படும் வலி மற்றும் அரிப்புகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.       

இருமல் வராமல் இருக்க இதை செய்யவும்

  மிகவும் இருமலினால் கஷ்டப்படுபவர்கள் 3 மிளகு மற்றும் பொரிகடலை 10 அளவு   எடுத்துக்கொண்டு மென்று சாப்பிடவும். சூடான நீரை அருந்தவும். தொண்டை பகுதியில் உள்ள பாக்டீரியா அழிந்து இருமல் குணமாகும்.    

கல்லிரல் சுத்தமாக்கும் வழிகள்

கல்லிரல் நமது உடல் நலமாக இருக்க இரத்தத்தை சுத்தப்படுத்தி நமது உடல் பாகங்களுக்கு அனுப்புகிறது. அந்த கல்லிரல் சுத்தமாக்கும் வழிகள் பார்க்கலாம். நெல்லிக்கனி நான்கு விதை நீக்கப்பட்டு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள  வேண்டும். கற்றாழை சாறு சிறிதளவு , கொத்தமல்லி இவை அனைத்தும்  சாறாக எடுத்து கொள்ள வேண்டும். சிறிதளவு கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து பானமாக அருந்தலாம். இந்த பானம் கல்லிரலை சுத்தப்படுத்தி நமது உடல் இரத்தம் சுத்தமாக இருக்க  உதவுகிறது.  இதை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதோ சிகரெட் பிடிப்பதோ  கூடாது. அதிகமான எண்ணெயினால் ஆன உணவுகளை தவிர்த்து  கீரை வகைகள் குறிப்பாக கரிசலாங்கண்ணி கீரை மற்றும் பச்சை  காய் கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். கல்லிரல் சிறப்பாக செயல்பட இரவு ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம். வெகு நேரம் விழித்து இருத்தல் கூடாது.

நம் உடலின் ஆக்சிஜன் சிலிண்டர் நுரையீரல்

இன்று கொரோனாவின் மூச்சு திணறிலிருந்து காப்பாற்ற எண்ணற்ற ஆக்சிஜன் சிலிண்டர் மக்களுக்கு தேவைப்படும் நிலையில் இதை அரசு உற்பத்தி செய்ய தாமதம் ஆவதாலும் மக்கள் உயிர் இழப்பு ஏற்பட்டு வருகின்றன.  நமது உடலுக்கு இயற்கை கொடுத்த ஆக்சிஜன் சிலிண்டர்தான் நுரையீரல். இது கொரோனா தாக்கத்தினால் செயல் இழந்து விடுகிறது. நமது உடலில் எந்த உறுப்பும் செயல்படாத நிலைக்கு தள்ளப்படும் போது அதை சரி செய்யும் பொறுப்பு நம் சிப்பாய்களான ரத்தமே முன்னிலை வகுக்கும். நம் ரத்தத்தினால் சரி செய்ய முடியாத நிலையில் உயிர் இழப்பு ஏற்படும். நம் ரத்தம் சிறப்பாக செயல்பட்டு சரி செய்ய வேண்டும் என்றால் நம் நுரையீரல் வலுவாக இருக்க வேண்டும்.  ரத்தம் செயல் படுவதற்கும் நுரையீரல் வலுவாக இருப்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது. நாம் சைக்கிள் சக்கரத்தில் காற்று இல்லையென்றால் காற்றை அடித்து விட்டு வெகு தூர பயணத்தை கடக்கிறோம். அது போல நம் நுரையீரலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் போது அதை நிரப்ப வேண்டும். அதை எவ்வாறு செய்வது மூச்சு பயிற்சி , வெகுதூரம் நடத்தல் , மலை ஏறுதல் , கிணற்றில் குளித்தல் , விளையாடுதல் , உடல் பயிற்சி செய்தல், சைக்கிள் ஓட...

ஓம் எனும் ஆரோக்ய சக்தி

ஓம் எனும் ஒலி அனைவரும் அறிந்த ஒன்று. இந்த ஒலி சக்தியை அளிக்குமா என்றால் அதற்கு ஆம் என்றே சொல்ல வேண்டும். (அ +உ +ம் = ஓம் ) இந்த அடி நாதத்தை தினம் தோறும் ஒலிப்போர்க்கு எந்த ஒரு ஆரோக்ய குறைபாடும் வருவதில்லை.  இந்த ஓம் என்ற உயரிய சக்தி நம் ஆரோக்கியத்தில் எவ்வாறு பங்கு அளிக்கிறது என்பதை பார்ப்போம். நாம் காலையில் எழுந்து நமது உடலை சுத்தம் செய்ய மலம் கழித்தல், பல் விலக்குதல் மற்றும் குளித்தல் ஆகியவற்றை செய்கிறோம். இதனை புற உடலை சுத்தம் செய்தல் என்று பொருள். ஆனால் தன் அக உடலை சுத்தம் செய்வதில்லை. புற உடல் சுத்தத்தால் வெளித்தோற்றம் நன்றாகவே இருக்கும். ஆனால் நம் மனம் மற்றும் மூளை சீரற்ற நிலையில் இயங்கும். பொதுவாக மனதில் பதட்டமோ, சோர்வோ ,சோம்பலோ , பயமோ மற்றும் தேவையில்லாத எண்ணங்களோ வந்து கொண்டு இருக்கும். இவை நம் மூளை மற்றும் மனதின் சீரற்ற இயக்கத்தினால் வருபவை. இந்த சீரற்ற நிலையை ஒருங்கிணைந்த சக்தியாக மாற்ற வல்லது இந்த ஓம் என்ற ஒலி. காலையில் வயல் வெளிகளிலோ அல்லது தோட்டத்திலோ உள்ள புற்களில் பனி நிறைந்து நீர் துளிகளாக மேலே இருக்கும். அதை நாம் பார்ப்பதற்கு அழகாக தோன்றலாம். ஆனால் புற்களுக்கு...

மயக்கம் (fainting) ஏன் வருகிறது

திடீரென மயக்கம் (fainting) வந்து கீழே விழுந்து கிடப்பவர்களை பார்த்து இருப்போம். மயக்கம் எப்படி ஒருவரை கீழே விழ செய்கிறது. இதன் அறிவியல் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.  அதற்கு முன் நமது உடலில் ஓடும் இரத்தத்திற்கும் புவி ஈர்ப்பு விசைக்கும் (Gravity Force) என்ன தொடர்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். நாம் எழுந்த நிலையில் உள்ள போது ஈர்ப்பு விசையின் காரணமாக இரத்தம் கீழ் நோக்கி இழுக்க படுகிறது. இதனால் இரத்த அழுத்தம் (blood pressure) இதயத்தில் இருந்து கீழ் நோக்கி பாதம் வரையிலும் செல்ல செல்ல அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே நாம் அதிக நேரம் நிற்க முடியாது. ஏனென்றால் இரத்த அழுத்தம் காலில் அதிகமாக இருக்கும்.  இதயத்தில் (heart) இருந்து மேல் நோக்கி மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அழுத்தம் குறைவாகவே இருக்கும். ஏனென்றால் ஈர்ப்பு விசை மேல் நோக்கி செயல்படாது. இதற்கு ஏற்ற மாதிரி இரத்த குழாய்களும் அமைந்து இருக்கும். இதயத்தில் இருந்து கீழ் நோக்கி செல்லும் இரத்த குழாய்கள் (blood vessels) அளவில் பெரியதாகவும் மேல் நோக்கி மூளைக்கு செல்லும் குழாய்கள் சிறியதாகவும் மற்றும் நுண்ணிய குழாய்களாகவும்...

Followers