Skip to main content

மூட்டு வலி நிவாரணம்

மூட்டு வலி நிவாரணம் 

உடல் இயங்குவதற்கு மூட்டு எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. எலும்புகள் வலுவாக இருக்குமானால் உடல் இயக்கமும் எளிதாக இருக்கும். மூட்டு எலும்புகள் பலவீனமாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

அதில் ஒன்று இன்றைய உணவு பழக்க மாறுபாடுகள். அதிக மாவுச்சத்து மற்றும் குக்கரில் சமைக்கபடும் உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் அதிகமாக மாமிச உணவுகள், இந்த உணவுகளால் உடல் எடை அதிகரித்து மூட்டுகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றது. 


இந்த அழுத்தம் மூட்டு இடையில் உள்ள synovial fluid (மூட்டுறை திரவம்) அளவை குறைக்கின்றது. இந்த synovial fluid பயன்பாடு நம் மூட்டு இடையில் உள்ள உராய்வை குறைத்து வலி இல்லாமல் சீராக நடக்க உதவுகின்றது. 

பொதுவாக வயது ஆவதால் எலும்பில் உள்ள திசுக்களின் அடர்த்தி குறைந்து கொண்டே வரும். இதன் அடர்த்தி அதிகமாக இருப்பதற்கு மெக்னீசியம் மற்றும் கால்சியம் அளவு மிக முக்கியமாக இருக்கின்றது.

இந்த மெக்னீசியம் மற்றும் கால்சியம் குறைபாட்டினால் எலும்பில் உள்ள திசுக்களின் அடர்த்தி குறைந்து கால் வீக்கம் மற்றும் நடக்க முடியாமல் போகும் நிலைமை ஏற்படுகிறது. இந்த நோய் osteoporosis என்றழைக்கபடுகின்றது. 

இந்த மெக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவு கேழ்வரகு (Finger Millet), இதை உணவாக எடுத்து கொண்டால் எலும்பு திசுக்களின் அடர்த்தி அதிகமாகி வலுவடைகின்றது.     

இன்று கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனைகளில் அதிகமாகி விட்டது. மூட்டு ஆபரேஷன் முடிந்த பிறகு கேழ்வரகு உணவை மருத்துவர்களை பரிந்துரைக்கிறார்கள். ஏனென்றால் மூட்டு இலகுவாக சீக்கிரமாக ஒன்று கூடுவதற்கு உதவுகின்றது. இந்த கேழ்வரகை முன்னரே உணவில் எடுத்து கொண்டு வந்தால் இந்த அறுவை சிகிச்சை தேவைபட்டிருக்காது.

சிறுதானிய உணவுகளும், கீரைகளும் , காய்கறிகளும் அதிகமாக எடுத்து கொண்டால் மூட்டு வலி வருவதை தவிர்க்கலாம். சீரான நடை பயிற்சியும் உடல் பயிற்சியும் மூட்டு வலிமையே அதிகரிக்கும். 

மூட்டு வலிக்கு கொத்தமல்லி இலையை கொதிக்கவைத்து கஷாயமாக எடுத்துக்கொண்டால் வலிநிவாரணம் பெறலாம்.



      




    






    






 



 

      

Comments

Followers

Popular posts from this blog

ஆபத்து நேரங்களில் சோடா ஏன் கொடுக்கப்படுகின்றது?

மனிதர்கள் மயக்கம் அடையும் நேரத்தில் சோடா கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இதன் அறிவியல் பின்னணி என்ன என்பதை காணலாம். மயக்கம் நமது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடை ஏற்படும் போது oxygen பற்றாக்குறை மூளையில் ஏற்படுகின்றது. இதனால் நாம் மயக்க நிலையை அடைகின்றோம்.  ரத்த ஓட்டம் செல்லாததிற்கு முக்கிய காரணம் இதயம் இயக்கம் சீராக இல்லாமல் மெதுவாக இயங்க ஆரம்பிக்கின்றது. இதனால் மூளைக்கு தேவையான ரத்தம் செல்வதில்லை. இதயம் சீராக இயங்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தண்ணீர் அளவு மற்றும் இதயம் இயங்குவதற்கு தேவையான சோடியம் , பொட்டாசியம் , கால்சியம் மற்றும் மெக்னீசியம் அவசியம். இந்த அயனிகள் குறைந்தால் இதயம் இயங்க தேவையான மின்சமநிலை குறையும். முக்கியமாக சோடியம் அளவு குறையும் பொது இதயம் இயங்க தேவையான மின் சமிக்ஞைகள் (electrical signals) உற்பத்தி குறைகின்றது. இந்த மின் சமிக்ஞைகள் இதய இயக்கத்தின் வேகத்தை  அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. இதனால் மூளை ரத்த ஓட்டம் சீராகின்றது. மயக்கம் தெளிகின்றது. இந்த சோடியம் சோடாவில் இருப்பதால்தான் சோடா கொடுக்கப்படுகின்றது.

உமிழ்நீர் சுரப்பின் பின் உள்ள அறிவியல்

நாம் சாப்பிடும் போது உணவை நன்றாக மென்று கூழ்ம நிலைக்கு மாற்றி நல்ல உணவு செரிமானத்திற்கு உமிழ்நீர் உதவுகின்றது என்பதை அனைவரும் அறிவீர்கள்.  இந்த உமிழ்நீர் எவ்வாறு மற்றும் எப்போது சுரக்கும் என்பதற்கான அறிவியல் பற்றி காணலாம்.  1. நாம் சாப்பிடும் போது வாய் அசைவு மற்றும் உணவின் சுவை நாக்கின் உணர்வு நரம்புகள் மூலமாக கடத்தப்பட்டு உமிழ்நீர் சுரப்பி தூண்டப்படுகிறது. இதனால் தேவையான அளவு உமிழ் நீர் சுரக்கின்றது. 2. அடுத்ததாக புளிப்பு சுவை உள்ள உணவு பொருட்களை சாப்பிடும் போது அதிகமாக உமிழ் நீர் சுரக்கும் உதாரணமாக புளி, ஊறுகாய் மற்றும் எலுமிச்சை இவற்றை சாப்பிடும்போது அதிகமாக சுரக்கும். ஏன் புளிப்பு சார்ந்த உணவை சாப்பிட்டால் அதிகமாக சுரக்கின்றது?  புளிப்பு உணவு மற்றும் பழங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது எடுத்துக்கொள்ளும்போது சிட்ரிக் அமிலம் பற்களை அரித்து சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால் புளிப்பு சுவையை அறிந்தவுடன் பற்களை பாதுகாக்க உமிழ்நீர் சுரப்பி உமிழ் நீரை சுரக்கின்றது. உண்மையில் புளிப்பு சுவை உள்ள சிட்ரிக் அமிலம் பற்களை மட்டும் அல்ல நம் உடலில் உள்ள எலும்பைக்கூட அரித்து சேதப்...

எப்போது மூளை (BRAIN) சுறுசுறுப்பாக இயங்குகிறது

எப்போது மூளை (BRAIN) சுறுசுறுப்பாக இயங்குகிறது. எந்த நிலைகளில் அதன் இயக்க நிலை மாறுபடுகிறது. நாம் தினசரி செய்யும் செயல்களான நடத்தல், உட்காருதல் மற்றும் தூங்குதல் இந்த மூன்று நிலைகளிலும் அதன் இயக்க நிலை மாறுபடும். எடுத்துக்காட்டாக நாம் பள்ளியில் படிக்கும்போது மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனித்து கொண்டிருப்போம். நேரம் ஆகும்போது சிலர் தூங்கி  விழுந்து கொண்டிருப்பார்கள். அதை சில மாணவர்கள் பார்த்து நகைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஆசிரியர் மட்டும் பாடம் எடுத்து கொண்டிருப்பார். அவருக்கு தூக்கம் வர சாத்தியமில்லை. ஏனென்றால் அவருடைய மூளை சிறப்பாக  இயங்கி கொண்டிருப்பதை அதற்கு காரணம். அவர் நின்றோ அல்லது நடந்து கொண்டோ இருக்கும் பொது அவர் கால்களில் உள்ள நரம்புகள் மூளையே தூண்டுவதன் மூலமாக அது சிறப்பாக  இயங்கி கொண்டிருக்கும்.  மாணவர்கள் அமர்ந்த நிலையில் இருக்கும் போது அவர்களின் கால் நரம்புகளின் இயக்கம் அதிகமாக தூண்டபடுவதில்லை இதனால்தான் அவர்கள் மூளை (SEMI ACTIVE) பாதி அளவிலான வேலையே செய்கிறது. இதனால் சிலருக்கு தூக்க நிலையை அடைவார்கள். அதனால்தான் ஆசிரியர் அவர்களை தூ...