மூட்டு வலி நிவாரணம்
உடல் இயங்குவதற்கு மூட்டு எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. எலும்புகள் வலுவாக இருக்குமானால் உடல் இயக்கமும் எளிதாக இருக்கும். மூட்டு எலும்புகள் பலவீனமாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
அதில் ஒன்று இன்றைய உணவு பழக்க மாறுபாடுகள். அதிக மாவுச்சத்து மற்றும் குக்கரில் சமைக்கபடும் உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் அதிகமாக மாமிச உணவுகள், இந்த உணவுகளால் உடல் எடை அதிகரித்து மூட்டுகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றது.
இந்த அழுத்தம் மூட்டு இடையில் உள்ள synovial fluid (மூட்டுறை திரவம்) அளவை குறைக்கின்றது. இந்த synovial fluid பயன்பாடு நம் மூட்டு இடையில் உள்ள உராய்வை குறைத்து வலி இல்லாமல் சீராக நடக்க உதவுகின்றது.
பொதுவாக வயது ஆவதால் எலும்பில் உள்ள திசுக்களின் அடர்த்தி குறைந்து கொண்டே வரும். இதன் அடர்த்தி அதிகமாக இருப்பதற்கு மெக்னீசியம் மற்றும் கால்சியம் அளவு மிக முக்கியமாக இருக்கின்றது.
இந்த மெக்னீசியம் மற்றும் கால்சியம் குறைபாட்டினால் எலும்பில் உள்ள திசுக்களின் அடர்த்தி குறைந்து கால் வீக்கம் மற்றும் நடக்க முடியாமல் போகும் நிலைமை ஏற்படுகிறது. இந்த நோய் osteoporosis என்றழைக்கபடுகின்றது.
இந்த மெக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவு கேழ்வரகு (Finger Millet), இதை உணவாக எடுத்து கொண்டால் எலும்பு திசுக்களின் அடர்த்தி அதிகமாகி வலுவடைகின்றது.
இன்று கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவமனைகளில் அதிகமாகி விட்டது. மூட்டு ஆபரேஷன் முடிந்த பிறகு கேழ்வரகு உணவை மருத்துவர்களை பரிந்துரைக்கிறார்கள். ஏனென்றால் மூட்டு இலகுவாக சீக்கிரமாக ஒன்று கூடுவதற்கு உதவுகின்றது. இந்த கேழ்வரகை முன்னரே உணவில் எடுத்து கொண்டு வந்தால் இந்த அறுவை சிகிச்சை தேவைபட்டிருக்காது.
சிறுதானிய உணவுகளும், கீரைகளும் , காய்கறிகளும் அதிகமாக எடுத்து கொண்டால் மூட்டு வலி வருவதை தவிர்க்கலாம். சீரான நடை பயிற்சியும் உடல் பயிற்சியும் மூட்டு வலிமையே அதிகரிக்கும்.
மூட்டு வலிக்கு கொத்தமல்லி இலையை கொதிக்கவைத்து கஷாயமாக எடுத்துக்கொண்டால் வலிநிவாரணம் பெறலாம்.

Comments
Post a Comment