இருதய அடைப்புக்கான முதன்மை காரணங்களாக இருப்பது அதிக மது, புகை பிடிக்கும் பழக்கம் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஏற்படுகின்றது. இருதயம் சிறப்பாக செயல்படுவதற்கு சுத்தமான காற்று, தண்ணீர், தாவர வகை உணவு மற்றும் உடல் உழைப்பு, இந்நான்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இந்த நான்கில் ஒன்று அதிக காலமாக குறைவு அல்லது அசுத்தம் ஏற்பட்டால் கூட இருதய அடைப்பு ஏற்படுகின்றது. இதில் சுத்தமான தண்ணீர் இருதய ரத்த ஓட்டத்திற்கு மிக முக்கியம். சுத்தமான தண்ணீர் தவிர வேற எந்தவிதமான தண்ணீர் (மது) அதிகமாக மற்றும் நாளைடைவில் எடுத்துக்கொள்ளும் போது இருதயத்தில் கொழுப்பு சேர்ந்து அடைப்பை ஏற்படுத்தும். சுத்தமான காற்று இதயம் இயங்குவதற்கு தேவைப்படுகின்றது. புகை பிடிக்கும் பழக்கத்தினால் சுத்தமான காற்று அசுத்தம் அடைந்து அது நுரையீரல் இயக்கத்தை தடைபடுத்தும். நுரையீரல் இயக்கம் தடை ஏற்படும்போது இதயத்திற்கு தேவையான காற்றின் அளவு குறைந்து மாரைடப்பு ஏற்படுகின்றது. இந்த அசுத்தமான காற்று மற்றும் நீரினால் ரத்த ஓட்ட தடை ஏற்பட்டு கால் மற்றும் கைகளில் வீக்கம் ஏற்படுகின்றது. இந்த வீக்கம் அல்லது கையில் வலி ஏற்படுவது மாரடைப்புக்கான...