Skip to main content

Posts

Showing posts from 2021

நம் உடலின் ஆக்சிஜன் சிலிண்டர் நுரையீரல்

இன்று கொரோனாவின் மூச்சு திணறிலிருந்து காப்பாற்ற எண்ணற்ற ஆக்சிஜன் சிலிண்டர் மக்களுக்கு தேவைப்படும் நிலையில் இதை அரசு உற்பத்தி செய்ய தாமதம் ஆவதாலும் மக்கள் உயிர் இழப்பு ஏற்பட்டு வருகின்றன.  நமது உடலுக்கு இயற்கை கொடுத்த ஆக்சிஜன் சிலிண்டர்தான் நுரையீரல். இது கொரோனா தாக்கத்தினால் செயல் இழந்து விடுகிறது. நமது உடலில் எந்த உறுப்பும் செயல்படாத நிலைக்கு தள்ளப்படும் போது அதை சரி செய்யும் பொறுப்பு நம் சிப்பாய்களான ரத்தமே முன்னிலை வகுக்கும். நம் ரத்தத்தினால் சரி செய்ய முடியாத நிலையில் உயிர் இழப்பு ஏற்படும். நம் ரத்தம் சிறப்பாக செயல்பட்டு சரி செய்ய வேண்டும் என்றால் நம் நுரையீரல் வலுவாக இருக்க வேண்டும்.  ரத்தம் செயல் படுவதற்கும் நுரையீரல் வலுவாக இருப்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது. நாம் சைக்கிள் சக்கரத்தில் காற்று இல்லையென்றால் காற்றை அடித்து விட்டு வெகு தூர பயணத்தை கடக்கிறோம். அது போல நம் நுரையீரலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் போது அதை நிரப்ப வேண்டும். அதை எவ்வாறு செய்வது மூச்சு பயிற்சி , வெகுதூரம் நடத்தல் , மலை ஏறுதல் , கிணற்றில் குளித்தல் , விளையாடுதல் , உடல் பயிற்சி செய்தல், சைக்கிள் ஓட...

ஓம் எனும் ஆரோக்ய சக்தி

ஓம் எனும் ஒலி அனைவரும் அறிந்த ஒன்று. இந்த ஒலி சக்தியை அளிக்குமா என்றால் அதற்கு ஆம் என்றே சொல்ல வேண்டும். (அ +உ +ம் = ஓம் ) இந்த அடி நாதத்தை தினம் தோறும் ஒலிப்போர்க்கு எந்த ஒரு ஆரோக்ய குறைபாடும் வருவதில்லை.  இந்த ஓம் என்ற உயரிய சக்தி நம் ஆரோக்கியத்தில் எவ்வாறு பங்கு அளிக்கிறது என்பதை பார்ப்போம். நாம் காலையில் எழுந்து நமது உடலை சுத்தம் செய்ய மலம் கழித்தல், பல் விலக்குதல் மற்றும் குளித்தல் ஆகியவற்றை செய்கிறோம். இதனை புற உடலை சுத்தம் செய்தல் என்று பொருள். ஆனால் தன் அக உடலை சுத்தம் செய்வதில்லை. புற உடல் சுத்தத்தால் வெளித்தோற்றம் நன்றாகவே இருக்கும். ஆனால் நம் மனம் மற்றும் மூளை சீரற்ற நிலையில் இயங்கும். பொதுவாக மனதில் பதட்டமோ, சோர்வோ ,சோம்பலோ , பயமோ மற்றும் தேவையில்லாத எண்ணங்களோ வந்து கொண்டு இருக்கும். இவை நம் மூளை மற்றும் மனதின் சீரற்ற இயக்கத்தினால் வருபவை. இந்த சீரற்ற நிலையை ஒருங்கிணைந்த சக்தியாக மாற்ற வல்லது இந்த ஓம் என்ற ஒலி. காலையில் வயல் வெளிகளிலோ அல்லது தோட்டத்திலோ உள்ள புற்களில் பனி நிறைந்து நீர் துளிகளாக மேலே இருக்கும். அதை நாம் பார்ப்பதற்கு அழகாக தோன்றலாம். ஆனால் புற்களுக்கு...

Followers