ஓம் எனும் ஒலி அனைவரும் அறிந்த ஒன்று. இந்த ஒலி சக்தியை அளிக்குமா என்றால் அதற்கு ஆம் என்றே சொல்ல வேண்டும். (அ +உ +ம் = ஓம்) இந்த அடி நாதத்தை தினம் தோறும் ஒலிப்போர்க்கு எந்த ஒரு ஆரோக்ய குறைபாடும் வருவதில்லை.
இந்த ஓம் என்ற உயரிய சக்தி நம் ஆரோக்கியத்தில் எவ்வாறு பங்கு அளிக்கிறது என்பதை பார்ப்போம்.
நாம் காலையில் எழுந்து நமது உடலை சுத்தம் செய்ய மலம் கழித்தல், பல் விலக்குதல் மற்றும் குளித்தல் ஆகியவற்றை செய்கிறோம். இதனை புற உடலை சுத்தம் செய்தல் என்று பொருள். ஆனால் தன் அக உடலை சுத்தம் செய்வதில்லை. புற உடல் சுத்தத்தால் வெளித்தோற்றம் நன்றாகவே இருக்கும். ஆனால் நம் மனம் மற்றும் மூளை சீரற்ற நிலையில் இயங்கும்.
பொதுவாக மனதில் பதட்டமோ, சோர்வோ ,சோம்பலோ , பயமோ மற்றும் தேவையில்லாத எண்ணங்களோ வந்து கொண்டு இருக்கும். இவை நம் மூளை மற்றும் மனதின் சீரற்ற இயக்கத்தினால் வருபவை. இந்த சீரற்ற நிலையை ஒருங்கிணைந்த சக்தியாக மாற்ற வல்லது இந்த ஓம் என்ற ஒலி.
காலையில் வயல் வெளிகளிலோ அல்லது தோட்டத்திலோ உள்ள புற்களில் பனி நிறைந்து நீர் துளிகளாக மேலே இருக்கும். அதை நாம் பார்ப்பதற்கு அழகாக தோன்றலாம். ஆனால் புற்களுக்கு தான் தெரியும் தான் கஷ்டப்பட்டு இந்த துளிகளை சுமந்து கொண்டிருக்கிறேன் என்று. அதன் பின் சூரியன் என்ற சக்தியால் அந்நீர் இழுக்கப்பட்டு விடும். இப்பொழுது அந்த புற்கள் புத்துணர்வுடன் காற்றில் ஆட தொடங்கும். இங்கே புற்களை மூளை மற்றும் மனமாகவும் , சூரியனை ஓம் என்ற ஒலியாகவும் குறிப்பிட விரும்புகிறேன்.
இதே மாதிரி நாம் காலையில் எழுந்ததும் நம் மூளையில் நீர் கோர்த்து இருக்கும். இந்த நீர் நம் வியர்வை சுரப்பிகளில் உள்ள உப்பிடம் சேர்ந்து கடின நீராக மாற்றப்படும். இந்த நீர் வெளியேற்ற படாமல் இருந்தால் நமது மூளையில் உள்ள நியூரான்கள் சிறப்பாக செயல்படாது. இதனால் தலை வலி வரலாம் அல்லது உடல் சோர்வு ஏற்படலாம். அந்த நாள் முழுவதும் சிறப்பாக செயல்பட முடியாது. ஓம் என்ற ஒலி எழுப்பி தியானம் செய்தால் அந்த ஒலியின் அதிர்வு நம் மூளையில் வெப்பமாக மாறும்.
இந்த வெப்பம் மூளையில் அனைத்து இடங்களுக்கும் பரவி கண்களின் வழியாக நீரை வெளி ஏற்றும். கெட்ட வாயுக்கள் வாய் வழியாக வெளியேறும். இப்போது நீங்கள் புத்துணர்வை அடைந்து விட்டீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
இன்னொரு உதாரணமாக பள்ளிக்கு வரும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து பல்வேறு எண்ணங்களை மனதில் கொண்டு வருவார்கள். அவர்கள் அனைவரும் பள்ளியில் நூழைந்ததும் கல்வி என்ற ஒரே எண்ணம் கொண்டவர்களாக மாற்றுவதற்கே கடவுள் வாழ்த்து பாடலை பாட சொல்லி மாபெரும் ஒலியாக எழுப்புவார்கள். இந்த ஒலியே கல்வி என்ற எண்ணம் கொண்டவர்களாக மாற்றும். இந்த ஒலியே போல் பல மடங்கு சக்தி கொண்டது ஓம் என்ற ஒலி. இதை போல் பள்ளி முடிந்தவுடன் எழுப்பப்படும் ஒலி மாணவர்களை வீட்டிற்கு போக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக மாற்றும்.
எனவே ஓம் என்ற ஒலியுடன் தியானம் செய்து ஆரோக்கியத்துடன் வாழலாம்.


Superrrr ji.. good information...👍
ReplyDelete