Need independence day for goat குட்டி ஆடு : அம்மா, நான் புல்லின் மீது ஓடி விளையாட வேண்டும் அம்மா , என்னை கூட்டிட்டு போகிறீர்களா. அம்மா ஆடு : சரி டா குட்டி நாம போகலாம். நன்றாக மழை பொழிந்து முடிந்த நேரம், அம்மாவும் குட்டி ஆடும் மகிழ்ச்சியாக புல்லை மேய்ந்து கொண்டு விளையாண்டது. சாயங்காலம் 5 மணி ஆனதும் ஆடு மேய்ப்பவர் வந்ததும் ஆட்டினை கூட்டிச்சென்றார். ஆட்டு கொட்டகையில் அடைத்து வைத்தார். குட்டி : அம்மா , என்னுடைய அப்பா எங்கம்மா எனக்கு அப்பா இல்லையாமா என கேட்டது. அம்மா : உனக்கு அப்பா இருந்தார் ஆனா இப்ப இல்லம்மா. குட்டி : ஏன்மா , அப்பா எங்க போய்ட்டார். அம்மா : அப்பாவ சாமிகிட்ட காவு குடுத்துட்டாங்கம்மா.. குட்டி : என்னமா என்ன சொல்றிங்க என்று புரியாமல் கேட்டது. அம்மா : அதுவா ஒன்னும் இல்லமா, சாமி கிட்ட போயிருக்காங்கமா ஒரு நாள் வருவாங்கனு சமாதானம் செய்தது. என்ன சொல்வது என்று தெரியாமல் குட்டியின் முகம் வாடிவிட்டது. மறு நாள் ஆடு வாங்குபவர் கொட்டகைக்கு வந்தார். ஆடு மேய்ப்பவரிடம் ஒரு இளம் குட்டி வேண்டும் என்று கேட்டார். ஆடு மேய்ப்பவர் அவரிடம் பெரிய ஆடு இருக்கிறது வாங்கி கொள்ளலாமே இளம் குட்டி...