Skip to main content

Posts

Showing posts from August, 2020

காய்ச்சல் வராமல் இருக்க வழிமுறைகள் ( Prevent Steps For Fever)

நம் உடலில் இயக்க சீரமைவு சரியாக இல்லாததால் காய்ச்சல் வருகிறது. காய்ச்சல் வருவதற்கு முன் நிலையான சளி மற்றும் இருமல் தொற்றி கொள்கிறது. இந்த முதல் நிலையிலே இதை தடுத்து விட்டால் காய்ச்சல் வருவதை தடுத்து விடலாம். காய்ச்சல் வந்த பிறகு மருந்து   எடுத்துகொள்வதை விட இதை ஆரம்பத்தில் தடுத்து விடுவதை சிறந்தது. உடலின் இயக்க சீரமைவு கபம், வாதம் மற்றும் பித்தம் இந்த மூன்றும் சீர் நிலையில் இருப்பது அவசியம். இந்த மூன்றும் தரும் மருந்து திரிபலா சூரணம். இது கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் உள்ளடக்கிய மருந்து. இது எல்லா நோய்களுக்கமான அரும்மருந்து.  இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதை  ஒரு அல்லது அரை கரண்டி (1 ஸ்பூன் ஓர் ஹலஃ ஸ்பூன்) எடுத்துக்கொண்டு தேன் அல்லது வெல்லத்துடன் சேர்த்து பருகலாம். இதை நீங்கள் டி அல்லது கஃபீக்கு பதிலாக கூட அருந்தலாம். உடலுக்கு மிகசிறந்த ஆற்றலை தரக்கூடியது.    

LEG PAIN MEDICINE

முதியவர்கள் அடிக்கடி நடப்பதற்கு சிரமப்படுவதுண்டு. அவர்கள் மூட்டு வலியே அதற்கு காரணம். காலில் வலி உள்ளவர்கள் பின்வரும் மருந்தை உபயோகித்தால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம். 1. ஆமணக்கு எண்ணெய்     2. தேங்காய் எண்ணெய்  3. கற்பூரம் இந்த மூன்றையும் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவுங்கள். ஒரு வெள்ளை துணியால் கட்டிவிடுங்கள். மற்றும் ஒரு வெள்ளை துணியே சூடான நீரில் அமிழ்த்தி பிழிந்து கொள்ளுங்கள். அப்புறம் ஒத்தடம் கொடுங்கள். இதை மூன்று நாட்கள் செய்து வாருங்கள். உங்கள் வலி குறைந்து விடும். The old aged people may often feel difficulty to walk because they have leg pain or join pain. To overcome this problem, we can use the below medicinal effective oils.  1. Castor Oil 2. Coconut Oil 3. Camphor Mix these above and apply these oils in white cloth and cover the white cloth in painful area.  Heat the water and put the another white cloth and drain the water completely. Then apply the cloth in painful area. Do it for 3 days repeatedly. Your pain will be gone....

TAKE CARE OF YOUR HEALTH

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் மஞ்சள் காமாலையால் இறந்து விட்டாள்.  அவளுக்கு நான்கு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. அக்குழந்தை அம்மாவை தேடி அழுது கொண்டிருக்கிறாள். அவள் இறப்பதற்கு முன் மதிய வேளையில் கடும் வயிற்று வலி வந்து வாந்தி எடுத்துருக்கிறார். அவர் கணவர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவர் குளுகோஸ் ஏற்றி விட்டு சரியாகிவிடும் என்று அனுப்பித்து வைத்துள்ளார்கள். இரவு வேளையில் மறுபடியும் வலி ஆரம்பித்து உள்ளது. மறுபடியும் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்துள்ளனர்.ஸ்கேனை பார்த்த மருத்துவர் உடல் உறுப்புகள் ஆன கல்லிரல் கணையம் அழுகி விட்டதாகவும் இனி காப்பாற்றுவது கடினம் என்றும் தெரிவித்துள்ளனர். சரியாக அதிகாலை 4 மணிக்கு அப்பெண் இறந்துள்ளார்.  அவர் கணவர் தெரிவித்தது அப்பெண்ணுக்கு தினமும் இரவு வாந்தி வரும் என்றும் அப்புறம் மாத்திரை எடுத்து கொண்டதும் சரியாகி விடும் என்றும் மருத்துவமனைக்கு செல்வதை வேண்டாம் என்றும் தவிர்த்து வந்துள்ளார். அவருக்கு அப்போது இது மிகப்பெரிய பிரச்சனை என்று அவருக்கு தெரியவில்லை. அவருக்கு மட்டுமில்லை பல பெண்களுக்கும் இது தெரிவதில்லை. வாந்தி நமக்கு ...

Followers