நம் உடலில் இயக்க சீரமைவு சரியாக இல்லாததால் காய்ச்சல் வருகிறது. காய்ச்சல் வருவதற்கு முன் நிலையான சளி மற்றும் இருமல் தொற்றி கொள்கிறது. இந்த முதல் நிலையிலே இதை தடுத்து விட்டால் காய்ச்சல் வருவதை தடுத்து விடலாம். காய்ச்சல் வந்த பிறகு மருந்து எடுத்துகொள்வதை விட இதை ஆரம்பத்தில் தடுத்து விடுவதை சிறந்தது. உடலின் இயக்க சீரமைவு கபம், வாதம் மற்றும் பித்தம் இந்த மூன்றும் சீர் நிலையில் இருப்பது அவசியம். இந்த மூன்றும் தரும் மருந்து திரிபலா சூரணம். இது கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் உள்ளடக்கிய மருந்து. இது எல்லா நோய்களுக்கமான அரும்மருந்து. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதை ஒரு அல்லது அரை கரண்டி (1 ஸ்பூன் ஓர் ஹலஃ ஸ்பூன்) எடுத்துக்கொண்டு தேன் அல்லது வெல்லத்துடன் சேர்த்து பருகலாம். இதை நீங்கள் டி அல்லது கஃபீக்கு பதிலாக கூட அருந்தலாம். உடலுக்கு மிகசிறந்த ஆற்றலை தரக்கூடியது.