இன்று கொரோனாவின் மூச்சு திணறிலிருந்து காப்பாற்ற எண்ணற்ற ஆக்சிஜன் சிலிண்டர் மக்களுக்கு தேவைப்படும் நிலையில் இதை அரசு உற்பத்தி செய்ய தாமதம் ஆவதாலும் மக்கள் உயிர் இழப்பு ஏற்பட்டு வருகின்றன. நமது உடலுக்கு இயற்கை கொடுத்த ஆக்சிஜன் சிலிண்டர்தான் நுரையீரல். இது கொரோனா தாக்கத்தினால் செயல் இழந்து விடுகிறது. நமது உடலில் எந்த உறுப்பும் செயல்படாத நிலைக்கு தள்ளப்படும் போது அதை சரி செய்யும் பொறுப்பு நம் சிப்பாய்களான ரத்தமே முன்னிலை வகுக்கும். நம் ரத்தத்தினால் சரி செய்ய முடியாத நிலையில் உயிர் இழப்பு ஏற்படும். நம் ரத்தம் சிறப்பாக செயல்பட்டு சரி செய்ய வேண்டும் என்றால் நம் நுரையீரல் வலுவாக இருக்க வேண்டும். ரத்தம் செயல் படுவதற்கும் நுரையீரல் வலுவாக இருப்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது. நாம் சைக்கிள் சக்கரத்தில் காற்று இல்லையென்றால் காற்றை அடித்து விட்டு வெகு தூர பயணத்தை கடக்கிறோம். அது போல நம் நுரையீரலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் போது அதை நிரப்ப வேண்டும். அதை எவ்வாறு செய்வது மூச்சு பயிற்சி , வெகுதூரம் நடத்தல் , மலை ஏறுதல் , கிணற்றில் குளித்தல் , விளையாடுதல் , உடல் பயிற்சி செய்தல், சைக்கிள் ஓட...