Skip to main content

கொரானாவே ஒழிக்க முடியுமா ?

கொரானாவே ஒழிக்க முடியுமா ?

கொரானாவே ஒழிப்பதுக்கு முன்னால் இதற்கு முன்னால் வந்த டெங்கு ,சிக்கன் குனியா மற்றும் ஸூவின் ப்ளூ இதை ஒழித்து விட்டோமா என்றால் கண்டிப்பாக இல்லை அவைகளும் அவ்வப்போது  பார்ட் 2 பார்ட் 3 யாக ரிலீஸ் ஆகி கொண்டிருக்கிறது. உதாரணத்துக்கு டெங்குவை உருவாக்கும் ஆர்போ வைரஸ் கொசுக்களிடமிருந்து பரவுகிறது. கண்களால் பார்க்க முடிகிற கொசுக்களின் இனங்களை 3000 அதில் சில இனங்கள் மட்டுமே இவ்வைரசே பரப்புகிறது.கொசுக்கள்தான் இதனை பரப்புகிறது என்பதை 1890 ஆம் ஆண்டிலே கண்டறியப்பட்டுள்ளது.அதன் பிறகு அனைத்து பெரிய நாடுகளும் இதனை ஒழிக்க ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது. இதில் இந்தியா ஒதுக்கியுள்ள நிதி 6000 கோடி ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் கூடுதலாக ஒதுக்கிய நிதி 17 கோடி.
இவ்வாறு உலகம் முழுவதும் 130 ஆண்டுகளாக எவ்வளவு பெரும் தொகையே செலவு செய்திருப்பார்கள் என்று யோசியுங்கள். ஆனால் இன்று வரையில் கொசு இனங்களும் அதனால் ஏற்படும் நோய்களும் அழிந்து இருக்கின்றனவா? இல்லை. அதை ஏன் அழிக்க முடியாது என்பதை அதன் இனப்பெருக்க விதிகளை அறிந்தாலே தெரிந்து கொள்ளலாம். இருந்தாலும் அதை ஒழிக்க ஒவ்வொரு நாடும் முயன்று கொண்டிருக்கிறது.          

கண்ணுக்கு தெரிந்த கொசுக்களையே நம்மால் அழிக்க முடியாது என்பதுதான் நிஜம். பின் கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமிகளே எப்படி ஒழிக்க முடியும். கிருமிகளின் எண்ணிக்கையே 15 இலட்சம் இதில் 5 சதவீத கிருமி இனங்கள் நம் வியாதிக்கு காரணமாக அமைகிறது. இப்படி நுண்நோக்கிகளால் கூட கண்டுபிடிக்க முடியாத கிருமிகளை அழிக்க முடியுமா? அப்படியே மருந்துகள் கண்டுபிடிக்கலாம் என்றாலும் அது சந்தைக்கு வருவதுக்கு 10-15 வருடங்கள் ஆகிவிடும். அதற்குள் புது கிருமியை உருவாகிவிடும். 




பிறகு எப்படித்தான் அழிப்பது? எப்போது நோய் வந்தாலும் அந்த நோய்க்கான மருந்து 
அதன் அருகிலேயே தான் இருக்கும். இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால் 
டெங்கு வரும் பொது அது குடும்பத்தில் உள்ள சிலருக்குத்தான் பாதிப்பே ஏற்படுத்தி இருக்கும் மற்றவர்கள் நலமாகவே இருப்பார்கள். ஏன் அவர்கள் மட்டும் பாதிக்க படவில்லை? அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். இப்ப மட்டுமில்லை இந்த நோய் கிருமிகளின் தாக்கத்திற்கு எந்த காலத்திலும் இந்த நோய் எதிர்ப்பு சக்தியே பதிலாக இருக்கும். இதனால் எந்த மருந்திற்கும் நீங்கள் காத்து கொண்டிருப்பது தீர்வாகாது. 

இந்த நோய் எதிர்ப்பு சக்தியே எப்படி அதிகரிப்பது என்பதை நான் புதிதாக 
சொல்ல வேண்டியதில்லை. நம் முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும் 
பின்னாடி உள்ள நன்மையே கண்டறிந்து பின்பற்றுங்கள் அதுவே உங்களுக்குள் சக்தியே 
உண்டாக்கி விடும். இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் உங்கள் உடம்பினே 
எந்த வகையிலும் கெடுத்து கொள்ளாமல் இருந்தால் உங்கள் உடலே இந்த கிருமிகளே 
பார்த்து கொள்ளும். 

உங்களுக்கு வேண்டுமானால் இந்த வைரஸ் கிருமிகள் உங்கள் கண்ணுக்கு தெரியாத  
எதிரியாக இருக்கலாம். ஆனால் உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் இது 
கண்ணுக்கு தெரிந்த எதிரியே. நம் நோய் எதிர்ப்பு செல்கள் உங்களுக்காக அந்த 
கிருமிகளிடம் போரிடும். நன்றி !          
    

      

Comments

Post a Comment

Followers

Popular posts from this blog

ஆபத்து நேரங்களில் சோடா ஏன் கொடுக்கப்படுகின்றது?

மனிதர்கள் மயக்கம் அடையும் நேரத்தில் சோடா கொடுக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகின்றது. இதன் அறிவியல் பின்னணி என்ன என்பதை காணலாம். மயக்கம் நமது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடை ஏற்படும் போது oxygen பற்றாக்குறை மூளையில் ஏற்படுகின்றது. இதனால் நாம் மயக்க நிலையை அடைகின்றோம்.  ரத்த ஓட்டம் செல்லாததிற்கு முக்கிய காரணம் இதயம் இயக்கம் சீராக இல்லாமல் மெதுவாக இயங்க ஆரம்பிக்கின்றது. இதனால் மூளைக்கு தேவையான ரத்தம் செல்வதில்லை. இதயம் சீராக இயங்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தண்ணீர் அளவு மற்றும் இதயம் இயங்குவதற்கு தேவையான சோடியம் , பொட்டாசியம் , கால்சியம் மற்றும் மெக்னீசியம் அவசியம். இந்த அயனிகள் குறைந்தால் இதயம் இயங்க தேவையான மின்சமநிலை குறையும். முக்கியமாக சோடியம் அளவு குறையும் பொது இதயம் இயங்க தேவையான மின் சமிக்ஞைகள் (electrical signals) உற்பத்தி குறைகின்றது. இந்த மின் சமிக்ஞைகள் இதய இயக்கத்தின் வேகத்தை  அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீராக்குகின்றது. இதனால் மூளை ரத்த ஓட்டம் சீராகின்றது. மயக்கம் தெளிகின்றது. இந்த சோடியம் சோடாவில் இருப்பதால்தான் சோடா கொடுக்கப்படுகின்றது.

உமிழ்நீர் சுரப்பின் பின் உள்ள அறிவியல்

நாம் சாப்பிடும் போது உணவை நன்றாக மென்று கூழ்ம நிலைக்கு மாற்றி நல்ல உணவு செரிமானத்திற்கு உமிழ்நீர் உதவுகின்றது என்பதை அனைவரும் அறிவீர்கள்.  இந்த உமிழ்நீர் எவ்வாறு மற்றும் எப்போது சுரக்கும் என்பதற்கான அறிவியல் பற்றி காணலாம்.  1. நாம் சாப்பிடும் போது வாய் அசைவு மற்றும் உணவின் சுவை நாக்கின் உணர்வு நரம்புகள் மூலமாக கடத்தப்பட்டு உமிழ்நீர் சுரப்பி தூண்டப்படுகிறது. இதனால் தேவையான அளவு உமிழ் நீர் சுரக்கின்றது. 2. அடுத்ததாக புளிப்பு சுவை உள்ள உணவு பொருட்களை சாப்பிடும் போது அதிகமாக உமிழ் நீர் சுரக்கும் உதாரணமாக புளி, ஊறுகாய் மற்றும் எலுமிச்சை இவற்றை சாப்பிடும்போது அதிகமாக சுரக்கும். ஏன் புளிப்பு சார்ந்த உணவை சாப்பிட்டால் அதிகமாக சுரக்கின்றது?  புளிப்பு உணவு மற்றும் பழங்களில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது எடுத்துக்கொள்ளும்போது சிட்ரிக் அமிலம் பற்களை அரித்து சேதத்தை ஏற்படுத்தக்கூடியது. இதனால் புளிப்பு சுவையை அறிந்தவுடன் பற்களை பாதுகாக்க உமிழ்நீர் சுரப்பி உமிழ் நீரை சுரக்கின்றது. உண்மையில் புளிப்பு சுவை உள்ள சிட்ரிக் அமிலம் பற்களை மட்டும் அல்ல நம் உடலில் உள்ள எலும்பைக்கூட அரித்து சேதப்...

எப்போது மூளை (BRAIN) சுறுசுறுப்பாக இயங்குகிறது

எப்போது மூளை (BRAIN) சுறுசுறுப்பாக இயங்குகிறது. எந்த நிலைகளில் அதன் இயக்க நிலை மாறுபடுகிறது. நாம் தினசரி செய்யும் செயல்களான நடத்தல், உட்காருதல் மற்றும் தூங்குதல் இந்த மூன்று நிலைகளிலும் அதன் இயக்க நிலை மாறுபடும். எடுத்துக்காட்டாக நாம் பள்ளியில் படிக்கும்போது மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனித்து கொண்டிருப்போம். நேரம் ஆகும்போது சிலர் தூங்கி  விழுந்து கொண்டிருப்பார்கள். அதை சில மாணவர்கள் பார்த்து நகைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஆசிரியர் மட்டும் பாடம் எடுத்து கொண்டிருப்பார். அவருக்கு தூக்கம் வர சாத்தியமில்லை. ஏனென்றால் அவருடைய மூளை சிறப்பாக  இயங்கி கொண்டிருப்பதை அதற்கு காரணம். அவர் நின்றோ அல்லது நடந்து கொண்டோ இருக்கும் பொது அவர் கால்களில் உள்ள நரம்புகள் மூளையே தூண்டுவதன் மூலமாக அது சிறப்பாக  இயங்கி கொண்டிருக்கும்.  மாணவர்கள் அமர்ந்த நிலையில் இருக்கும் போது அவர்களின் கால் நரம்புகளின் இயக்கம் அதிகமாக தூண்டபடுவதில்லை இதனால்தான் அவர்கள் மூளை (SEMI ACTIVE) பாதி அளவிலான வேலையே செய்கிறது. இதனால் சிலருக்கு தூக்க நிலையை அடைவார்கள். அதனால்தான் ஆசிரியர் அவர்களை தூ...