Skip to main content

Posts

மஞ்சள் காமாலை மருந்து

கீழாநெல்லி இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தமான இலையை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் மோருடன் கலந்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். மேலும் ஹெப்படைட்டிஸ் 'பி' மற்றும் 'சி' ஆல் உண்டாகும் கல்லீரல் பாதிப்புகளிலிருந்து நம்மைக் காக்கும்.

சர்க்கரை நோய் மருந்து

உலர்ந்த கீழாநெல்லிப் பொடியை மூன்று வேளையும் உணவுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புக்களைத் தடுத்து டயாலிஸிஸ் செய்வதிலிருந்து நம்மைக் காக்கும்.

மருத்துவ செடிகள்

துளசி - சுவாச விருத்தி  கற்றாழை - சரும விருத்தி  காரட் - கண் விருத்தி  தாத்தா செடி - காய விருத்தி  எலுமிச்சை - உடல் சுத்தி  கரிசலாங்கண்ணி - தேச சுத்தி  கருவேப்பிலை - உடல் விருத்தி நித்ய கல்யாணி - புற்று சுத்தி  கீழா நெல்லி - மஞ்சள் காமாலை மருந்து  வல்லாரை - மூளை விருத்தி தும்பை செடி - விஷம் முறுக்கி

சரும நிவாரணி சோற்றுக் கற்றாழை - Aloe Vera

சோற்றுக் கற்றாழை (aloe vera) சரும நோய்களுக்கு மிக சிறந்த மருந்தாக பயன்படுகிறது. அலர்ஜி , பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளினால் சருமத்தில் ஏற்படும் வலி மற்றும் அரிப்புகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.       

இருமல் வராமல் இருக்க இதை செய்யவும்

  மிகவும் இருமலினால் கஷ்டப்படுபவர்கள் 3 மிளகு மற்றும் பொரிகடலை 10 அளவு   எடுத்துக்கொண்டு மென்று சாப்பிடவும். சூடான நீரை அருந்தவும். தொண்டை பகுதியில் உள்ள பாக்டீரியா அழிந்து இருமல் குணமாகும்.    

கல்லிரல் சுத்தமாக்கும் வழிகள்

கல்லிரல் நமது உடல் நலமாக இருக்க இரத்தத்தை சுத்தப்படுத்தி நமது உடல் பாகங்களுக்கு அனுப்புகிறது. அந்த கல்லிரல் சுத்தமாக்கும் வழிகள் பார்க்கலாம். நெல்லிக்கனி நான்கு விதை நீக்கப்பட்டு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள  வேண்டும். கற்றாழை சாறு சிறிதளவு , கொத்தமல்லி இவை அனைத்தும்  சாறாக எடுத்து கொள்ள வேண்டும். சிறிதளவு கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து பானமாக அருந்தலாம். இந்த பானம் கல்லிரலை சுத்தப்படுத்தி நமது உடல் இரத்தம் சுத்தமாக இருக்க  உதவுகிறது.  இதை எடுத்து கொள்ளும் போது மது அருந்துவதோ சிகரெட் பிடிப்பதோ  கூடாது. அதிகமான எண்ணெயினால் ஆன உணவுகளை தவிர்த்து  கீரை வகைகள் குறிப்பாக கரிசலாங்கண்ணி கீரை மற்றும் பச்சை  காய் கறிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். கல்லிரல் சிறப்பாக செயல்பட இரவு ஆழ்ந்த தூக்கம் மிகவும் அவசியம். வெகு நேரம் விழித்து இருத்தல் கூடாது.

நம் உடலின் ஆக்சிஜன் சிலிண்டர் நுரையீரல்

இன்று கொரோனாவின் மூச்சு திணறிலிருந்து காப்பாற்ற எண்ணற்ற ஆக்சிஜன் சிலிண்டர் மக்களுக்கு தேவைப்படும் நிலையில் இதை அரசு உற்பத்தி செய்ய தாமதம் ஆவதாலும் மக்கள் உயிர் இழப்பு ஏற்பட்டு வருகின்றன.  நமது உடலுக்கு இயற்கை கொடுத்த ஆக்சிஜன் சிலிண்டர்தான் நுரையீரல். இது கொரோனா தாக்கத்தினால் செயல் இழந்து விடுகிறது. நமது உடலில் எந்த உறுப்பும் செயல்படாத நிலைக்கு தள்ளப்படும் போது அதை சரி செய்யும் பொறுப்பு நம் சிப்பாய்களான ரத்தமே முன்னிலை வகுக்கும். நம் ரத்தத்தினால் சரி செய்ய முடியாத நிலையில் உயிர் இழப்பு ஏற்படும். நம் ரத்தம் சிறப்பாக செயல்பட்டு சரி செய்ய வேண்டும் என்றால் நம் நுரையீரல் வலுவாக இருக்க வேண்டும்.  ரத்தம் செயல் படுவதற்கும் நுரையீரல் வலுவாக இருப்பதற்கும் என்ன தொடர்பு உள்ளது. நாம் சைக்கிள் சக்கரத்தில் காற்று இல்லையென்றால் காற்றை அடித்து விட்டு வெகு தூர பயணத்தை கடக்கிறோம். அது போல நம் நுரையீரலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் போது அதை நிரப்ப வேண்டும். அதை எவ்வாறு செய்வது மூச்சு பயிற்சி , வெகுதூரம் நடத்தல் , மலை ஏறுதல் , கிணற்றில் குளித்தல் , விளையாடுதல் , உடல் பயிற்சி செய்தல், சைக்கிள் ஓட...

ஓம் எனும் ஆரோக்ய சக்தி

ஓம் எனும் ஒலி அனைவரும் அறிந்த ஒன்று. இந்த ஒலி சக்தியை அளிக்குமா என்றால் அதற்கு ஆம் என்றே சொல்ல வேண்டும். (அ +உ +ம் = ஓம் ) இந்த அடி நாதத்தை தினம் தோறும் ஒலிப்போர்க்கு எந்த ஒரு ஆரோக்ய குறைபாடும் வருவதில்லை.  இந்த ஓம் என்ற உயரிய சக்தி நம் ஆரோக்கியத்தில் எவ்வாறு பங்கு அளிக்கிறது என்பதை பார்ப்போம். நாம் காலையில் எழுந்து நமது உடலை சுத்தம் செய்ய மலம் கழித்தல், பல் விலக்குதல் மற்றும் குளித்தல் ஆகியவற்றை செய்கிறோம். இதனை புற உடலை சுத்தம் செய்தல் என்று பொருள். ஆனால் தன் அக உடலை சுத்தம் செய்வதில்லை. புற உடல் சுத்தத்தால் வெளித்தோற்றம் நன்றாகவே இருக்கும். ஆனால் நம் மனம் மற்றும் மூளை சீரற்ற நிலையில் இயங்கும். பொதுவாக மனதில் பதட்டமோ, சோர்வோ ,சோம்பலோ , பயமோ மற்றும் தேவையில்லாத எண்ணங்களோ வந்து கொண்டு இருக்கும். இவை நம் மூளை மற்றும் மனதின் சீரற்ற இயக்கத்தினால் வருபவை. இந்த சீரற்ற நிலையை ஒருங்கிணைந்த சக்தியாக மாற்ற வல்லது இந்த ஓம் என்ற ஒலி. காலையில் வயல் வெளிகளிலோ அல்லது தோட்டத்திலோ உள்ள புற்களில் பனி நிறைந்து நீர் துளிகளாக மேலே இருக்கும். அதை நாம் பார்ப்பதற்கு அழகாக தோன்றலாம். ஆனால் புற்களுக்கு...

மயக்கம் (fainting) ஏன் வருகிறது

திடீரென மயக்கம் (fainting) வந்து கீழே விழுந்து கிடப்பவர்களை பார்த்து இருப்போம். மயக்கம் எப்படி ஒருவரை கீழே விழ செய்கிறது. இதன் அறிவியல் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.  அதற்கு முன் நமது உடலில் ஓடும் இரத்தத்திற்கும் புவி ஈர்ப்பு விசைக்கும் (Gravity Force) என்ன தொடர்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். நாம் எழுந்த நிலையில் உள்ள போது ஈர்ப்பு விசையின் காரணமாக இரத்தம் கீழ் நோக்கி இழுக்க படுகிறது. இதனால் இரத்த அழுத்தம் (blood pressure) இதயத்தில் இருந்து கீழ் நோக்கி பாதம் வரையிலும் செல்ல செல்ல அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே நாம் அதிக நேரம் நிற்க முடியாது. ஏனென்றால் இரத்த அழுத்தம் காலில் அதிகமாக இருக்கும்.  இதயத்தில் (heart) இருந்து மேல் நோக்கி மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அழுத்தம் குறைவாகவே இருக்கும். ஏனென்றால் ஈர்ப்பு விசை மேல் நோக்கி செயல்படாது. இதற்கு ஏற்ற மாதிரி இரத்த குழாய்களும் அமைந்து இருக்கும். இதயத்தில் இருந்து கீழ் நோக்கி செல்லும் இரத்த குழாய்கள் (blood vessels) அளவில் பெரியதாகவும் மேல் நோக்கி மூளைக்கு செல்லும் குழாய்கள் சிறியதாகவும் மற்றும் நுண்ணிய குழாய்களாகவும்...

எப்போது மூளை (BRAIN) சுறுசுறுப்பாக இயங்குகிறது

எப்போது மூளை (BRAIN) சுறுசுறுப்பாக இயங்குகிறது. எந்த நிலைகளில் அதன் இயக்க நிலை மாறுபடுகிறது. நாம் தினசரி செய்யும் செயல்களான நடத்தல், உட்காருதல் மற்றும் தூங்குதல் இந்த மூன்று நிலைகளிலும் அதன் இயக்க நிலை மாறுபடும். எடுத்துக்காட்டாக நாம் பள்ளியில் படிக்கும்போது மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனித்து கொண்டிருப்போம். நேரம் ஆகும்போது சிலர் தூங்கி  விழுந்து கொண்டிருப்பார்கள். அதை சில மாணவர்கள் பார்த்து நகைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஆசிரியர் மட்டும் பாடம் எடுத்து கொண்டிருப்பார். அவருக்கு தூக்கம் வர சாத்தியமில்லை. ஏனென்றால் அவருடைய மூளை சிறப்பாக  இயங்கி கொண்டிருப்பதை அதற்கு காரணம். அவர் நின்றோ அல்லது நடந்து கொண்டோ இருக்கும் பொது அவர் கால்களில் உள்ள நரம்புகள் மூளையே தூண்டுவதன் மூலமாக அது சிறப்பாக  இயங்கி கொண்டிருக்கும்.  மாணவர்கள் அமர்ந்த நிலையில் இருக்கும் போது அவர்களின் கால் நரம்புகளின் இயக்கம் அதிகமாக தூண்டபடுவதில்லை இதனால்தான் அவர்கள் மூளை (SEMI ACTIVE) பாதி அளவிலான வேலையே செய்கிறது. இதனால் சிலருக்கு தூக்க நிலையை அடைவார்கள். அதனால்தான் ஆசிரியர் அவர்களை தூ...

Followers